News March 18, 2024
3 இலக்க OTP-யா? ரசிகர்கள் குழப்பம்

CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது, 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை 9.10 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய போது, ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதளங்கள் முடங்கின. சிறிது நேரம் கழித்து டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், CSK இணையத்தளத்தில் 4 இலக்க OTP-க்கு பதிலாக 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News November 28, 2025
வெனிஸ் அழகை ரசித்த அஜித் பேமிலி (PHOTOS)

அண்மையில் இத்தாலியில் ஜென்டில்மேன் டிரைவர் விருதை, அஜித்துக்கு வழங்கி பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட் கௌரவித்திருந்தது. இந்த விருதை பெற அஜித் தனது குடும்பத்துடன் வெனிஸ் சென்ற நிலையில், அந்த போட்டோஸை இப்போது ஷாலினி பகிர்ந்துள்ளார். வெனிஸ் நகரின் அழகியலோடு எடுக்கப்பட்டுள்ள அஜித் பேமிலி போட்டோஸ் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.
News November 28, 2025
மருத்துவ காலி பணியிடங்கள்: அன்புமணி Vs மா.சு.,

மருத்துவத்துறையில் 12,000 காலிபணியிடங்கள் இருப்பதாக <<18266345>>அன்புமணி<<>> குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஜீரோ காலி பணியிடங்கள் என்ற வகையில் மருத்துவத்துறை செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 1.75 லட்சம் பேர் பணிபுரியும் மருத்துவத்துறையில் காலி பணியிடங்கள் எங்கே உள்ளது என்பதை ஆய்வு செய்து காட்டுங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.
News November 28, 2025
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காங்., MLA

கேரளா காங்கிரஸ் MLA ராகுல் மம்கூத்ததில் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். பெண் ஒருவர் நேரடியாக CM பினராயி விஜயனிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மலையாள நடிகை உட்பட பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதமே காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.


