News March 18, 2024
3 இலக்க OTP-யா? ரசிகர்கள் குழப்பம்

CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது, 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை 9.10 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய போது, ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதளங்கள் முடங்கின. சிறிது நேரம் கழித்து டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், CSK இணையத்தளத்தில் 4 இலக்க OTP-க்கு பதிலாக 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 16, 2025
வங்கி கணக்கில் ₹2,000… தமிழக அரசு அப்டேட்

PM KISAN திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.
News December 16, 2025
திமுகவின் அடுத்த முகமா உதயநிதி?

வாரிசு அரசியல் என்ற விமர்சனம் திமுக மீது இன்றும் உள்ளது. இந்நிலையில், உதயநிதி முதலில் கட்சியில் இணைந்தபோது, சொந்த கட்சியினரே அதிப்ருதியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், சமீபமாக உதயநிதியே திமுகவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார் என மூத்த தலைவர்களே கூறிவருகின்றனர். அதேநேரம், அவர் <<18564320>>திராவிட கொள்கைகளை<<>> முன்னெடுத்து செல்கிறார் என்றும் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News December 16, 2025
சற்றுமுன்: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹90.81 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


