News March 18, 2024

3 இலக்க OTP-யா? ரசிகர்கள் குழப்பம்

image

CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது, 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை 9.10 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய போது, ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதளங்கள் முடங்கின. சிறிது நேரம் கழித்து டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், CSK இணையத்தளத்தில் 4 இலக்க OTP-க்கு பதிலாக 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Similar News

News November 13, 2025

எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல: ஒமர் அப்துல்லா

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களாக உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் வாழும் அனைத்தும் முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்று அம்மாநில CM ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், நாட்டின் அமைதியை குலைப்பதற்கென சிலர் உள்ளதாக குறிப்பிட்டார்.

News November 13, 2025

தமிழ் நடிகர் மரணம்.. நெஞ்சை உலுக்கிய சோகம்

image

‘கொள்ளி வைக்க ஒரு ஆள் வேண்டாமா?’ என்ற வார்த்தையின் வலியை அபிநய்யின் இறுதிச்சடங்கு உணர்த்திவிட்டது. இறுதிச்சடங்கு செலவை தாம் ஏற்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இப்படி ஒரு கொடுமையான முடிவா நமக்கு என்று அபிநய்யின் ஆத்மா எண்ணிய நேரத்தில், KPY பாலா உள்ளிட்ட சிலரின் முயற்சியால், தூரத்து உறவினர் ஒருவரை வரவழைத்து கொள்ளி வைத்துள்ளனர்.

News November 13, 2025

81.37% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள்: ECI

image

கடந்த நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (நவ.13) மதியம் 3 மணி வரை 81.37% வாக்காளர்களுக்கு SIR கணக்கீட்டு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 5.21 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!