News March 18, 2024
3 இலக்க OTP-யா? ரசிகர்கள் குழப்பம்

CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது, 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை 9.10 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய போது, ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் இணையதளங்கள் முடங்கின. சிறிது நேரம் கழித்து டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், CSK இணையத்தளத்தில் 4 இலக்க OTP-க்கு பதிலாக 3 இலக்க OTP வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News December 14, 2025
விஜய் கட்சியில் மோதல் வெடித்தது

தவெகவில் புஸ்ஸி ஆனந்த் – ஆதவ் இடையே அதிகார மோதல் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூரில் தவெக நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனரில் ஆதவ் படத்தை வைத்ததாக கூறி வட்டச்செயலாளர் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார். இதனை கண்டித்து, மாவட்ட செயலாளருக்கு எதிராக தவெகவினரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே புதுச்சேரி நிகழ்ச்சிக்காக ஆதவ் போன் செய்தபோது, மா.செ.,க்கள் அவரின் அழைப்பை எடுக்கவில்லையாம்.
News December 14, 2025
புதிய கட்சியை தொடங்கினார் மார்ட்டின் மகன்

புதுச்சேரியில் தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ‘லட்சிய ஜனநாயக கட்சி’ (LJK) என்ற புதிய கட்சியை தொடங்கினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்., பாஜக, காங்., திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய கூட்டணியை உருவாக்க, அவர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இவரின் அரசியல் வருகையால், திமுகவும் ஜெகத்ரட்சகனை புதுச்சேரி முதல்வராக களமிறக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
News December 14, 2025
CSK குறிவைக்கும் முக்கிய வீரர்கள்!

2025 IPL-ல் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், இம்முறை ஏலத்தில் சூப்பர் ஃபார்மில் இருக்கும் வீரர்களை வாங்க CSK முனைகிறது. ₹43 கோடி வைத்துள்ள CSK-வின் பிரதான டார்கெட் கேமரூன் கிரீன் அல்லது லியம் லிவிங்ஸ்டனாக இருக்கக்கூடும். டெத் பவுலிங்கிற்காக மதீஷா பதிரானாவை மீண்டும் குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கும். ஜடேஜாவின் இடத்தை நிரப்பிட உள்ளூர் லீக்கில் கலக்கும் பிரசாந்த் வீரை வாங்க CSK குறிவைத்துள்ளது.


