News April 14, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு தொடர் விடுமுறை கிடைக்கப் போகிறது. ஆம், வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை வருகிறது. அடுத்த நாள் சனிக்கிழமை. ஆகவே, இந்த வார இறுதியும் 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. கோடை விடுமுறையும் தொடங்கப் போவதால், இப்போதே உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
Similar News
News November 14, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுக, ஓபிஎஸ், டிடிவி கட்சியினர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், ஒசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் S.புருசோத்தமரெட்டி உள்ளிட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களின் ஆதரவாளர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
News November 14, 2025
ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்ற ஆணையம்

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆணவக்கொலைகளை தடுக்க தேவையான பரிந்துரைகளை வழங்க ஆணையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாவை தலைவராகக் கொண்ட ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி V.பழனிக்குமார், S.ராமநாதன் (IPS) ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழு, 3 மாதங்களில் பரிந்துரைகளை வழங்கும்.
News November 14, 2025
தன வரவு அதிகரிக்கும் மகாலட்சுமி வழிபாடு!

வெற்றிலையை பன்னீரில் சுத்தம் செய்து, அதன் நடுப்பகுதியில் சந்தனத்தை வட்ட வடிவில் இடவும். அதன் நடுவில் குங்குமப் பொட்டு வைக்கவும். தாம்பாள தட்டின் மேல் இந்த வெற்றிலையை,
மகாலட்சுமியாக பாவித்து மலர்களாலோ, அட்சதையாலோ, நாணயங்களாலோ அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனையின் போது, பின்வரும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள். ‘ஓம் தன தான்யாதிபதயே நமஹ’. இந்த ஆன்மிக பதிவை அனைவரும் அறிய ஷேர் பண்ணுங்க.


