News April 14, 2025

3 நாள்கள் தொடர் விடுமுறை

image

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு மீண்டும் ஒரு தொடர் விடுமுறை கிடைக்கப் போகிறது. ஆம், வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை வருகிறது. அடுத்த நாள் சனிக்கிழமை. ஆகவே, இந்த வார இறுதியும் 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. கோடை விடுமுறையும் தொடங்கப் போவதால், இப்போதே உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

Similar News

News October 31, 2025

நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. இங்கு NO விடுமுறை

image

மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், அக்.22-ம் தேதி கனமழையால் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 31, 2025

காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கசாயம்!

image

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ✱செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கசாயம் ரெடி. இதனை காலை, மாலை என இரு வேலை பருகலாம். SHARE IT.

News October 31, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி

image

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!