News February 16, 2025

மார்ச் மாதத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை

image

அடுத்த மாதம் 29ஆம் தேதி (சனிக்கிழமை), 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31ஆம் தேதி (திங்கட்கிழமை) ரம்ஜானுக்கு எனத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பொது விடுமுறை வருகிறது. இந்த நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 31ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை நாள் என்றாலும், நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் <<15445801>>வங்கி<<>> ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 12, 2025

விஜயவாடாவில் இன்று ‘WAY2NEWS Conclave’

image

விஜயவாடாவில் இன்று ‘WAY2NEWS Conclave’ நடைபெறுகிறது. இதில், ஆந்திர CM சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, MP-க்கள் பரத், ஹரீஷ் பாலயோகி, YSR காங்., தலைவர்கள் ஷஜாலா ராமகிருஷ்ணா ரெட்டி, புகானா ராஜேந்திரநாத் ரெட்டி ஆகியோர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான AP வளர்ச்சி குறித்து தலைவர்கள் பேச உள்ளதால், பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

News September 12, 2025

வீட்டில் பச்சிளம் குழந்தை இருக்கா? கவனமா இருங்க!

image

10 மாதம் தவமிருந்து பெற்ற குழந்தையை பேணி பாதுகாப்பது பெற்றோரின் கடமை. மகாராஷ்டிராவில் 7 மாத குழந்தை, கீழே கிடந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிட, அது தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தவழும் வயதில் எதை பார்த்தாலும், குழந்தைகள் வாயில் எடுத்து போட்டுக் கொள்ளும் பழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், விழிப்புடன் இருக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இதனை அனைவரும் ஷேர் பண்ணுங்க.

News September 12, 2025

RECIPE: ஹெல்தியான வரகரிசி தட்டை!

image

சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வரகரிசி உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அதோடு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் மொறு மொறு வரகரிசி தட்டை Recipe இதோ.
*கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து மசாலாவாக ரெடி செய்யவும்.
*இத்துடன் வரகரிசி மாவு & உளுத்தம் பருப்பு மாவு & உப்பு சேர்த்து சிறிய தட்டைகளாகத் தட்டவும்.
*அதை எண்ணெயில் பொரித்தெடுத்தால், சுவையான வரகரிசி தட்டை ரெடி. SHARE IT.

error: Content is protected !!