News April 1, 2025
மும்மொழிக் கொள்கைக்கு 35 லட்சம் பேர் ஆதரவு

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு 35 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் கடந்த மாதம் தொடங்கியது. ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதற்காக பாஜகவினர் வீடு வீடாக சென்று மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
Similar News
News April 2, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்ட்டர்

கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
News April 2, 2025
வக்ஃபு மசோதாவை திரும்ப பெறுக.. முதல்வர் கடிதம்

வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பபெற வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
News April 2, 2025
பாகிஸ்தான் அதிபர் ஹாஸ்பிடலில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 69 வயதான அவர், கராச்சியில் இருக்கும் ஒரு தனியார் ஹாஸ்பிடலில், காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் பலமுறை மருத்துவ பரிசோதனை செய்து அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.