News April 10, 2024

அரசுப் பள்ளிகளில் 3.20 லட்சம் மாணவர் சேர்க்கை

image

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 1 முதல் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.

Similar News

News August 12, 2025

அடுத்த 48 மணி நேரத்தில்.. கனமழை வெளுக்கும்!

image

வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அது 48 மணி நேரத்தில் வலுவடையும் என்றும் IMD கணித்துள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. உங்க ஊரில் மழையா?

News August 12, 2025

பெண் கையை பிடித்து இழுத்தால் குற்றமா? தீர்ப்பு

image

திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த வழக்கில் முருகேசன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ஒரு ஆண் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்திருப்பது குற்றமாகாது எனக்கூறி 3 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

News August 12, 2025

ஒடிசாவில் தேர்தல் முறைகேடு: பிஜு ஜனதா தளம் புகார்

image

ஒடிசாவில் நடத்த லோக்சபா, சட்டமன்ற தேர்தல்களில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக BJD தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் ECI கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ள BJD, கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!