News February 16, 2025
3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

மதுராந்தகத்தில், நேற்று (பிப்.15) சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி கீரனூர் அருகே சாலையை கடக்க முயற்சி செய்தது. அப்போது, லாரி திடீரென நின்றதால், மணல் ஏற்றி வந்த லாரி சிலிண்டர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிலிண்டர் லாரி சற்று முன்னாள் நகர்ந்து சென்றதால், சென்னை மார்க்கமாக சென்ற கண்டைனர் லாரி மீதும் மோதியது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News August 24, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டுதாரர்கள் இத நோட் பண்ணிக்கோங்க

காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
காஞ்சிபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHAREசெய்யுங்கள். <<17503608>>(தொடர்ச்சி) <<>>
News August 24, 2025
காஞ்சிபுரம்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

காஞ்சி மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே க்ளிக் செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)