News October 23, 2024
3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அன்பரசன் திமிரி கி.ஊ. பிடிஓவாகவும், அங்கு பணியாற்றி வந்த சிவப்பிரகாசம் காவேரிப்பாக்கம் கி.ஊ. பிடிஓவாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சோளிங்கர் துணை பிடிஓ பாபு அதே அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று கி.ஊ. பிடிஓவாக மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
Similar News
News January 28, 2026
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை தமிழ்நாடு அரசின் வேலையற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, டிப்ளமோ பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 28, 2026
ராணிப்பேட்டை: பெற்றோர்கள் கவனத்திற்கு! (அவசியம்)

ராணிப்பேட்டையில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2.பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930) இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
இராணிப்பேட்டையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று வாராந்திரப் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அறிவுறுத்தலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC) தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த புகார்கள் மற்றும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.


