News March 25, 2025

3 ரூபங்களில் காட்சியளிக்கும் முருகன்

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியம் திருத்தலத்தில் மாசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இத்தலத்தில் மூலவர் முருகன், காலை பாலனாக, நண்பகல் வாலிபனாக, மாலை வயோதிகனாக காட்சி தருவது சிறப்பாகும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.

Similar News

News March 26, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 25, 2025

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த முருகன் (41) என்பவர், தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2019ல் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முருகன் மீது திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு நீதிபதி, முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News March 25, 2025

திருவள்ளூர் மக்களே கண்டிப்பா இத பண்ணிடுங்க!

image

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!