News July 26, 2024
3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எச்சரிக்கை.

கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை முழுமையாக நிரம்பி வருகிறது. அணையின் முழுக்கொள்ளவான 52 அடிகளில் தற்போது அணை 51அடிகளை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
கிருஷ்ணகிரியில் 250 கோழிகள் இலவசம்!

கிருஷ்ணகிரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
கிருஷ்ணகிரி: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News March 9, 2026
BREAKING: கிருஷ்ணகிரியில் கொடூரத்தின் உச்சம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70வயது முதியவர், நள்ளிரவில் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது 60 வயது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமும் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.


