News April 17, 2024
3 நாள் விடுமுறை: குவிந்த மதுப்பிரியர்கள்

நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவின்போது அசம்பாவிதங்கள், பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க இன்று முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. வாக்குப்பதிவு நடைபெறும் முன்பு சிறிய சச்சரவுகளை தடுக்க டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.
Similar News
News December 29, 2025
பல்லடம்: மாநாட்டிற்கு 10 வகையான தின்பண்டங்கள்

வெல்லும் தமிழ் பெண்கள் மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 5 மணி அளவில் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சுமார் 1.5 லட்சம் நாற்காலிகளில் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் தனிப்பையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
News December 29, 2025
திருப்பூர்: POST OFFICE-ல் வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கே<
News December 29, 2025
திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

திருப்பூர் தெற்கு போலீசார் காங்கேயம் ரோடு சி.டி.சி. கார்னர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெரிய கடை வீதியைச் சேர்ந்த முகமது அலி(39) என்பதும், அவரிடம் 200 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


