News November 6, 2025
3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலின் முருகனை பற்றி பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 6, 2025
விரைவில் அரசியலில் மாற்றம்: அன்புமணி

தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தேர்தலின்போது பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றிபெறலாம் என கணக்குப்போடும் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும்; 2026-ல் திமுக தோற்கடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அன்புமணியின் இந்த பேச்சு மூலம் விரைவில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 6, 2025
அணு ஆயுத சோதனைக்கு ரெடியாகிறதா ரஷ்யா?

அதிபர் டிரம்ப் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். தொடர்ந்து ரஷ்யாவும், அமெரிக்காவும் மாறி மாறி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத சோதனைகளுக்கான திட்டங்களை தயாரிக்க தனது உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா ஒருவேளை அணு ஆயுத சோதனையை நடத்தினால், கடந்த 35 ஆண்டுகளாக உள்ள உலகளாவிய அணு ஆயுத சோதனைக்கான தடையை உடைத்துவிடும்.
News November 6, 2025
புது Syllabus-ஐ உருவாக்க உயர்மட்டக்குழு: அரசாணை

NEP-ஐ தமிழ்நாடு எதிர்த்து வருவதோடு, தனியாக மாநில கல்விக்கொள்கையும் வடிவமைத்து வெளியிட்டது. இந்த TSEP-ஐ பின்பற்றி பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், ISRO தலைவர் நாராயணன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாட வல்லுநர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


