News March 10, 2025

3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா

image

சேலம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் சத்யா. இவர் தனது 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் முன்பு அமர்ந்து தர்ணாவில் இன்று ஈடுபட்டார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அருகில் வசிக்கும் நபர் ஒருவர் மது குடித்து வந்து தினமும் தொல்லை செய்கிறார். தனியாக வாழும் எனக்கு பாதுகாப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார்

Similar News

News July 8, 2025

சேலம் சரகத்தில் ரூ.20 கோடிக்கு மாம்பழம் விற்பனை

image

சேலம் சரகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மாம்பழம் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கடைசி ரகமான நீலம் வகை மாம்பழம் விற்பனை நடைபெற்று வருகிறது. சேலம் சரகத்தில் மட்டும் நடப்பாண்டு சீசனில் சுமார் ரூபாய் 20 கோடி அளவுக்கு மாம்பழங்கள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம் சீசன் 100 நாட்கள் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 8, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, கோவை-தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று (ஜூலை 08) காலை 07.50 மணிக்கு புறப்பட வேண்டிய நிலையில் சுமார் 11.10 மணி நேரம் தாமதமாக இரவு 07.00 மணிக்கு புறப்படும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

News July 8, 2025

பெண்கள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

image

ஆத்தூர் சகி பெண்கள் சேவை மையத்தில் வேலைக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள நபர்கள் 15.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம். அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 அழைக்கவும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.SHAREit

error: Content is protected !!