News September 4, 2025

3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டி ஊராட்சி காமகவுண்டம்பட்டியில் வழிப்பறி கொள்ளை வழக்கில் ஆகாஷ்கண்ணன், பாலாஜி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் இளம் வயதிலேயே பல்வேறு வழக்குகள் பெற்று உள்ளனர். இந்தநிலையில் மாவட்ட கலெக்டருக்கு கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா பரிந்துரையில் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் அனைவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Similar News

News September 4, 2025

கரூர் மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம் உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

News September 4, 2025

கரூரில் இலவசமாக பெற இதைச் செய்யுங்கள்!

image

கரூர் மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது உங்கில் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க

News September 4, 2025

கரூரில் சுற்றுலா விருதுக்கான இணையதளம் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து 15-09-2025ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுற்றுலா அலுவலர், 04324-256257 மற்றும் அலைபேசி எண். 9789630118 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!