News June 16, 2024

3 ஆண்டுகளாக முடங்கிய ஆவின் பாலகம்

image

சிவகாசி மாநகராட்சி பகுதிகளான திருத்தங்கல் பேருந்து நிலையம், எம்எல்ஏ அலுவலகம், பழைய விருதுநகர் சாலை, மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிதாக ஆவின் பாலகம் அமைக்கப்பட்டது. இந்த ஆவின் பாலகம் ஒரு நாள் கூட செயல்படாமல் தற்போது வரை பூட்டியே கிடப்பதாக கூறும் பொதுமக்கள் இதனால் ஆவின் நிர்வாகத்திற்கும் மக்களுக்கும் எந்த பயனும் இல்லை என புலம்புகின்றனர் .

Similar News

News March 2, 2026

சிவகாசி: கருந்திரி தயாரித்த 7 பேர் மீது வழக்கு

image

வெம்பக்கோட்டை அருகே பனையடிப்பட்டியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக தகர செட்டில் பட்டாசு கருந்திரி தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக தயார் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான கருந்திரிகள், 270 குரோஸ்களையும் பறிமுதல் செய்து கீழக்காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்துவை(32) கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.

News March 2, 2026

விருதுநகரில் +2 பொதுத்தேர்வு எழுதும் 22123 மாணவர்கள்

image

தமிழகம் முழுவதும் இன்று +2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 218 பள்ளிகளிலிருந்து 9855 மாணவர்கள், 11, 715 மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் 553 பேர் என மொத்தம் 22123 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக 99 தேர்வு மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 99 தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News March 1, 2026

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

image

வீரசோழனை சேர்ந்த சிவகாமி நரிக்குடி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது 2016-ம் ஆண்டு வீட்டிற்கு செல்லும்போது அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார். இழப்பீடு கோரி ஸ்ரீவி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.30.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

error: Content is protected !!