News May 7, 2025

3 மாதங்களில் 19 விபத்துகள்: 3 பேர் பலி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் 13 – 17 வயதுடைய சிறுவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் 19 விபத்துகள் நடந்துள்ளன. அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுவர்களுக்கு வாகனத்தை இயக்க அனுமதி வழங்கும் பெற்றோர்களே அதன் விளைவுகளுக்கான தண்டனையை ஏற்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News September 18, 2025

திருவள்ளூர் ஆட்சியார் அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். 14 ஒன்றியங்களில் மொத்தம் உள்ள 526 ஊராட்சிகளில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதம் நடைபெறும்.

News September 18, 2025

திருவள்ளூர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

ஆவடி காவல் ஆணையரத்திற்குட்பட்ட பட்டாபிராம் பகுதியில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடூமை செய்த வழக்கில் வினோத் என்பவரை பட்டாபிராம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்த நிலையில் இன்று 17.09.2025 வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 35 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.40,000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

News September 18, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்காக தான் இந்த செய்தி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(செப்.18) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!