News April 19, 2025
3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 4 வழிச்சாலை மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை (ஏப்.20 முதல் ஏப்.22ஆம் தேதி வரை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை செல்லும் வாகனங்கள் செனட்டாப் சாலை, சேமியர்ஸ் ரோடு வழியாக சென்று நந்தனம் சந்திப்பில் இடது வலது புறம் திரும்பி தங்கள் இலக்கை சென்று அடையலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
Similar News
News October 25, 2025
சென்னை: களப்பணியில் 22,000 பணியாளர்கள்!

சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய 22,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர். பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள், 500 டிராக்டர்கள், 478 வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News October 25, 2025
அடையாறு ஆற்றில் சீரமைப்புப் பணி!

அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்பு நீர்வளத்துறையினரால் செப்டம்பர் 2025 முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து 24.10.2025 அன்று மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கையினை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி இயந்திரங்களுடன் பணிகள் நடைபெற்றன.
News October 25, 2025
சென்னை: எம்.பி தம்பிதுரை மருத்துவானையில் அனுமதி!

அதிமுக ராஜ்யசபா எம்.பி மற்றும் முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில நாட்களாக சிறு உடல் நலப் பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.


