News April 6, 2025

2ஆம் வகுப்பு மாணவிக்கு டி.சி! அதிர்ச்சி சம்பவம்

image

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு மாணவி சரியாக படிக்கவில்லை என கூறி டி.சி பெற்றுக்கொள்கிறோம் என முத்திரைதாளில் எழுதி வாங்கிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை மிரட்டி படிக்கவைக்க இத்தகைய செயலில் ஈடுபட்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், இது மாணவியின் மனநிலையை பாதிக்கும் என பெற்றோர்கள் அச்சம். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 14, 2025

கோவை: திருட்டை தடுக்க இத பண்ணுங்க!

image

கோவையில் வெளியூர் செல்லும் பொதுமக்கள், தங்கள் வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், காவல் நிலையங்களில் தெரிவிக்கலாம். திருட்டை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும் என காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் முகவரி மற்றும் வீடு எத்தனை நாட்களுக்குப் பூட்டி இருக்கும் போன்ற தகவல்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, 81900-00100 எண்ணிலோ தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க!

News April 14, 2025

கோவை: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

தண்டுமாரியம்மன் கோயில் – உப்பிபாளையம். கோனியம்மன் கோயில் – கோவை. மாசாணியம்மன் கோயில் – ஆனைமலை. வனபத்ரகாளியம்மன் கோவில் – மேட்டுப்பாளையம். செல்லாண்டியம்மன் கோயில் – சிங்கநல்லூர். அங்காளம்மன் கோயில் – சூலூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – ஒத்தக்கால் மண்டபம். கரியகாளியம்மன் கோயில் – தாளக்கரை. சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

மாநில அளவில் 38வது இடம் பிடித்த கோவை மாணவி

image

தேசிய திறனாய்வு தேர்வு அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்.28ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 27 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் இனிவரும் 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை பெற உள்ளனர். இதில் மாணவி வர்ஷா மாவட்டத்தில் முதல் இடத்தையும், மாநிலத்தில் 38வது இடத்தையும் பிடித்து சாதித்துள்ளார்.

error: Content is protected !!