News August 16, 2024
நாளை SMC குழுவின் 2ஆவது கட்ட கூட்டம்

அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை (SMC) கட்டமைக்கும் 2ஆவது கூட்டம், நாளை நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் 12,117 அரசுப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளைய கூட்டத்தில் 8,000க்கும் அதிகமான பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை மேம்படுத்த பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
Similar News
News November 25, 2025
ALERT: அவசர எண்களை மாத்தியாச்சு.. இத கவனியுங்க!

பொதுவாக, பிரசவ வலி முதல் சாலை விபத்து, மாரடைப்பு போன்ற எந்த மருத்துவ உதவிக்கு, 108 என்ற எண்ணில் ஆம்புலன்ஸ்க்கு அழைப்போம். ஆனால், அதில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன *102 – கர்ப்பிணி & பச்சிளம் குழந்தைகளின் உதவிகளுக்கு *1073 – சாலை விபத்துகளுக்கு *104- இலவச மருத்துவ உதவிகளுக்கு. மற்ற உதவிகளுக்கு ‘108’ என்ற எண்ணில் அழைக்கலாம். இந்த அத்தியாவசிய செய்தியை அனைவருக்கும் பகிரவும்.
News November 25, 2025
BLO-வை வீட்டில் அடையுங்கள்: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

SIR படிவங்களை எடுத்துவரும் BLO-க்களை வீட்டில் கட்டிவையுங்கள் என ஜார்க்கண்ட் காங்., அமைச்சர் இர்ஃபான் அன்சாரி பேசியுள்ளார். வாக்களர் பெயர்களை நீக்குவதற்காகவே அவர்கள் வீடுதேடி வருவதாக கூறிய அவர், SIR-க்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், அமைச்சரின் பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், BLO-க்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
News November 25, 2025
டிகிரி மட்டும் போதும்; வங்கியில் வேலை: APPLY NOW

பேங்க் ஆப் பரோடாவில் Apprentice பணிக்கு 153 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதி: ஏதாவது ஒரு டிகிரி. வயது வரம்பு: 20-28 வயது வரை. ஊதியம்: மாதம் ₹15,000 வரை Stipend. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழி தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 1. விண்ணப்பிக்கும் முறை: Bank of Baroda அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாக மட்டுமே. வேலை தேடுவோருக்கு SHARE THIS.


