News March 22, 2025

ஐதராபாத்தில் 2 ஆவது கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

image

நியாயமான தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவின் 2 ஆவது கூட்டம் ஐதராபாத்தில் நடக்கும் என TN CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த முதல் கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்க 3 மாநில CMகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்ததன் பேரில், அடுத்த கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News March 23, 2025

கிரிக்கெட் ரசிகர்கள் Safetyக்கு ‘சென்னை சிங்கம்’

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் CSK – MI இடையே நடக்கும் எல் கிளாசிக்கோ போட்டியை காண திரளான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்களின் பாதுகாப்புக்காக ‘சென்னை சிங்கம் IPL QR-CODE’ என்ற நவீன வசதியை சென்னை போலீஸ் அறிமுகம் செய்திருக்கிறது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இந்த QR-CODE மூலம் மக்கள் போலீஸிடம் புகார் தெரிவிக்கலாம்.

News March 23, 2025

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மழை தொடரும்: IMD

image

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நெல்லையில் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 23, 2025

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்?

image

கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸூக்கு ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். எனினும் 2 மாதங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!