News September 15, 2024

ஸ்ரேயாஸ் அணி 2ஆவது தோல்வி

image

துலிப் கோப்பை தொடரின் 2ஆவது சுற்றில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி (இந்தியா டி) தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா ஏ அணியுடன் நடைபெற்ற போட்டியில் 488 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்தியா டி அணி 301 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 186 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், நடப்பு தொடரில் இந்தியா டி அணி 2ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

Similar News

News August 6, 2025

கருண் நாயரின் கெரியர் முடிந்ததா?

image

ராஞ்சி டிராபியில் 863 ரன்கள் அடித்து, 9 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்பிடித்த கருண் நாயர், IND vs ENG டெஸ்ட் தொடரில் கடுமையாக சொதப்பினார். இந்த தொடரில் வெறும் 205 ரன்களை மட்டுமே எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர், தனது ஃபார்மை நிரூபிக்காததால், தேர்வுக்குழுவும், ரசிகர்களும் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இதனால் அடுத்து அணியில் இடம்பெறுவது கடினம் என்கின்றனர்.

News August 6, 2025

24 மணி நேரத்திற்குள் வரி விதிப்பு: டிரம்ப்

image

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் வரிவிதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா தான் அமெரிக்காவிடம் அதிக வர்த்தகத்தில் ஈடுபடுகிறது, ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை எனவும், இந்தியா ஒரு சிறந்த வர்த்தக கூட்டாளி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கி, உக்ரைன் போரை வளர்ப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News August 6, 2025

அதி நவீன ஏவுகணைகளை களமிறக்க முடிவு

image

ஆபரேஷன் சிந்தூரின் போது நமது பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட குழு விரைவில் கூட உள்ளது. இந்தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்பில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன.

error: Content is protected !!