News July 22, 2024
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு 29ஆம் தேதி விடுமுறை

ஆடி கிருத்திகை 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் அம்மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு 29ஆம் தேதி விடுமுறை. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆக். 10 வேலைநாளாக கடைபிடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 28, 2025
இலங்கை மீட்பு பணியில் இந்திய ஹெலிகாப்டர்கள்

<<18410040>>இலங்கை<<>> கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் இந்தியாவின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உதவுமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்றுள்ள இந்தியா, கொழும்புவில் நிறுத்தப்பட்டுள்ள INS Vikrant போர் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்காக அனுப்ப உள்ளது.
News November 28, 2025
உங்க குழந்தைகள் அதிகம் போன் பார்க்கிறார்களா?

குழந்தைகள் தற்போது ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துகின்றனர். தூங்காமல் கூட ரீல்ஸ் பார்க்கின்றனர். இது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், பார்வை பாதிப்பு, மனநிலை மாற்றம், நரம்பியல் பிரச்னைகளும் ஏற்படலாம். இதனை தடுக்க, 6-12 வயது பிள்ளைகள் குறைந்தது 9 மணி நேரம் தூங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த முக்கிய தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 28, 2025
நாளை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

டிட்வா புயல் எதிரொலியாக நாளை (நவ.28) நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ம் தேதி கார்த்திகை மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறையாகும்.


