News December 5, 2024
28 பந்தில் சதம்…வரலாறு படைத்த அபிஷேக் ஷர்மா

சையத் முஷ்டாக் தொடரில் மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் சதம் அடித்தார். முதலில் விளையாடிய மேகாலயா, 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் அபிஷேக் ஷர்மா தனி ஒருவனாக ரன் மழை பொழிந்தார். அந்த அணி 9.3 ஓவரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 பந்தில் சதம் அடித்த IND வீரர் உர்வில் படேலின் சாதனையை அபிஷேக் சமன் செய்துள்ளார்.
Similar News
News April 29, 2025
காஷ்மீர்: கவனம் ஈர்த்த எதிர்க்கட்சித் தலைவர்கள்

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் மோடி அரசை தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பக்குவமாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான சசிதரூர், ஓவைசி, உமர் அப்துல்லா ஆகியோர் கவனம் ஈர்த்துள்ளனர். ஆளும் அரசை சாடாமலும், பாகிஸ்தானை கண்டித்தும் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பாராட்டப்படுகின்றன.
News April 29, 2025
இந்தியன் 2 போல் திராவிட மாடல் 2.0 தோல்வி

இன்றோடு முடிவுற்ற TN பேரவைக் கூட்டத்தொடரில், 2026-ல் திராவிட மாடல் Part 2 தொடரும் என CM ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து பேசிய ADMK உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், TN-ல் Part 2 எப்போதும் தோல்விதான், இந்தியன் 2 கூட தோல்வியடைந்து விட்டது எனக் கூறினார். DMK கூட்டணியில் அங்கம் வகிக்கும் MNM தலைவர் கமல்ஹாசன் நடித்த இப்படம் படுதோல்வியடைந்தது. INDIA கூட்டணியையே ஆர்.பி. கூறியதாக ADMK-வினர் சிலாகிக்கின்றனர்.
News April 29, 2025
டெல்லியில் அமித் ஷா ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று அமித் ஷா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இக்கூட்டத்தில், உள்துறை செயலாளர், BSF, CRPF, NSG அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். எல்லையில் 5 நாள்களாக பாகிஸ்தானுடனான பதற்றம் தொடரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.