News March 28, 2024
27 வேட்பு மனுக்கள் அதிரடி தள்ளுபடி

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 53 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 26 மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்கப்பட்டன. 27 மனைகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு வாபஸ் தேதிக்கு பின் இறுதிப் போட்டியாளர்கள் விபரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வேலை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள மத்திய கருவிகளுக்கான சர் சி வி ராமன் மையத்தில் 2 தொழில்நுட்ப உதவியாளர்கள், 2 திட்ட உதவியாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். கல்வித்தகுதி மற்றும் விபரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தகுதி உடையவர்கள் சுயக்குறிப்புடன் அக்.29ம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நேர்காணலில் பங்கேற்கலாம். SHARE
News October 29, 2025
புயல் காரணமாக நெல்லை ரயில் ரத்து!

மோன்தா புயல் காரணமாக இணை ரயில் ரத்து செய்யப்பட்டதால் நெல்லை வழியாக இயக்கப்படும் பெங்களூர் சிட்டி நாகர்கோவில் விரைவு ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக பெங்களூருக்கு செல்லும் 30ஆம் தேதி விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. எனவே இந்நாளில் ரயிலில் பயணம் செய்ய முன் பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.*ஷேர்
News October 28, 2025
நெல்லை இரவு நேர காவலர்கள் விவரங்கள் இதோ…

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக். 28) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.


