News November 24, 2024
27ஆம் தேதி பிஎஃப் குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நெல்லை உதவி ஆணையர் குமாரவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளியில் வரும் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 25, 2026
திருநெல்வேலி: அரசு அதிகாரியை வெட்டி கொன்ற விவகாரம்

மூலைக்கரைப்பட்டி, ஆணையப்பபுரம் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர் சுந்தர்(37) (பிப்.23) டூவீலரில் சென்றபோது, இருவர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை செய்த சகோதர்களான மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (37), தம்பி சுடலை (34) போலீசில் சரணடைந்தனர். பெண் தொடர்பான தகராறால் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
News February 25, 2026
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

பிப்ரவரி மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பிப்.27 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார். எரிவாயு நுகர்வோர் உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கள், காலதாமதம் போன்றவை குறித்து நேரில் புகார் அளித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் துரை தெரிவித்துள்ளார்.
News February 25, 2026
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

பிப்ரவரி மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் பிப்.27 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார். எரிவாயு நுகர்வோர் உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கள், காலதாமதம் போன்றவை குறித்து நேரில் புகார் அளித்து பயனடையலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் துரை தெரிவித்துள்ளார்.


