News November 24, 2024
27ஆம் தேதி பிஎஃப் குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நெல்லை உதவி ஆணையர் குமாரவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளியில் வரும் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
நெல்லை: மகளை கர்பமாக்கிய தந்தை

நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன், மனவளர்ச்சி குறைபாடு கொண்ட 27 வயது திருமணமாகாத பெண் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவரது 65 வயது தந்தை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News December 12, 2025
நெல்லை: நடந்து சென்ற ஊழியருக்கு ஏற்பட்ட சோகம்

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் உலகநாதன் (61). மரக்கடையில் பணி செய்யும் இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாலையோரம் நடந்து சென்று அந்த வழியாக வந்த பைக் உலகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்த அவர் நெல்லை G.H-ல் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 11) காலை உயிரிழந்தார். இது குறித்து, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 12, 2025
நெல்லை: பைக்கில் தவறி விழுந்து இளைஞர் பலி

நெல்லை டவுணை அடுத்த பேட்டை அருகே உள்ள திருப்பணிகரிசல்குளம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (18). இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி பைக் கவிழ்ந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை உயிரிழந்தார். பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


