News November 24, 2024
27ஆம் தேதி பிஎஃப் குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நெல்லை உதவி ஆணையர் குமாரவேல் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளியில் வரும் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஐ. உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
நெல்லை: ஜனவரி 2 வரை தடை உத்தரவு

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின்படி நெல்லை மாநகரப் பகுதியில் இன்று 19ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி ஜனவரி 2ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு அமலில் இருக்கும். இதன்படி பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
நெல்லைக்கு முதலமைச்சர் வருகை.. முழு விவரம் இதோ…

நாளை (டிச.20) நெல்லை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து ரெட்டியார்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இரவு 7 மணிக்கு திறந்து வைக்கிறார். டிச.21ஆம் தேதி காலை 9:30 மணிக்கு நெல்லை G.H மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
News December 19, 2025
நெல்லை – ஐதராபாத் நேரடி ரயில் இயக்கப்படுமா?

நெல்லை, குமரியில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விரைவு விரைவில் இயக்கப்படுகின்றன. ஆனால், ஐதராபாத்துக்கு நெல்லை, குமரியில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. எனவே, நெல்லையிலிருந்து ஹைதராபாத்திற்கு தினசரி சிறப்பு ரயில் இயக்க தென்மத்திய ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


