News January 2, 2025

255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது

image

விழுப்புரத்தில் 2024ஆம் ஆண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது. 4 கொள்ளை, 28 வழிப்பறி, 360 திருட்டு என மொத்தமாக 392 குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், 255 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 300 போ் கைது செய்யப்பட்டு, ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 34 கொலை சம்பவங்களில் 62 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Similar News

News December 20, 2025

விழுப்புரம்: சிறுநீர் கழிக்க சென்றவர் துடிதுடித்து பலி!

image

விழுப்புரம்: பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (26), இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த நிலத்தில் சட்டத்தை மீறி காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்த வழக்கில், மின்வேலி அமைத்த மதனை போலீசார் கைது செய்தனர்.

News December 20, 2025

விழுப்புரத்தில் விஜய்க்கு பதிலடி கொடுத்த நயினார்!

image

சமீபத்தில் தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று விழுப்புரத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “சிலர் வண்டியில் வந்து பாட்டு பாடுகிறார்கள். மாஸ் என்கிறார்கள், காசு என்கிறார்கள். ஆனால் நாங்க மிகப்பெரிய பிக்பாஸ் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என மறைமுகமாக சாடியுள்ளார்.

News December 20, 2025

விழுப்புரம்: பாலியல் குற்றவாளிக்கு அதிரடி தீர்ப்பு!

image

செஞ்சி அருகே கடந்த 2020-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த 13 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து, மிரட்டல் விடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அஞ்சாசேரியைச் சேர்ந்த ராஜேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!