News January 22, 2025
குரூப் 1 மூலம் தேர்வான 25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

குரூப் 1 மூலம் டிஎஸ்பிக்களாக பணியில் சேர்ந்த 25 போலீஸ் எஸ்பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யுபிஎஸ்சி மூலம் தேர்வாகி ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதைப் போல, குரூப் தேர்வு மூலம் தேர்வாகும் நபர்களுக்கும் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும். இது கடந்த 2018 ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசின் பரிந்துரையின் படி தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
Similar News
News March 7, 2026
T20 WC: நாளை வருண் விளையாடுவாரா?

வருண் சக்ரவர்த்தி நாளை நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், வருணின் ஃபார்ம் பற்றி தங்களுக்கு கவலையில்லை; நம்பர் 1 பவுலரான அவருக்கு அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்று தெரியும் என்று கூறினார். மேலும், லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து நாளை தெரியவரும் என்றார்.
News March 7, 2026
மகளிருக்கு ₹5 லட்சம்.. ஜாக்பாட் தேர்தல் அறிவிப்பு

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுகளில் உறுப்பினராக இருந்து MSME நிறுவனம் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது 100% மானியம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளிர் நலனுக்காக தனி இலாகா தொடங்கப்பட்டு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.
News March 7, 2026
மீண்டும் கூட்டணி அறிவிப்புக்கு நாள் குறித்த ராமதாஸ்

TN-ல் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டுக்கு சென்றுவிட்டனர். ஆனால், ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடவில்லை. மகளிர் தின வாழ்த்து கூறிய ராமதாஸிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இன்னும் 12 நாள்களில் கூட்டணி அறிவிப்பு வரும் என கூறியுள்ளார். ஏற்கெனவே 2 முறை தேதி குறித்தும் கூட்டணி அறிவிப்பு வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.


