News May 15, 2024
25 மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, வேலூர், சேலம், நாமக்கல் உள்பட 21 மாவட்டங்களில் மிதமான மழையும். செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடியுடன் லேசான மழையும் பெய்யக் கூடும். இதனால் சாலை தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News September 19, 2025
மெதுவாக வேலை செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம்

புதுச்சேரியில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு உயரதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அம்மாநில CM ரங்கசாமி கூறி வந்த நிலையில், அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ₹250 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டிலும் இதை கொண்டு வரலாமா?
News September 19, 2025
EPFO சேவைகள் இனி ஈஸி

பிஎப் (EPFO) இணையதளத்தில் சேவைகளை பெற லாக்-இன் செய்யும்போது, பாஸ்புக் விவரங்களை பார்க்க தனியே லாக்-இன் செய்ய வேண்டியிருந்தது. இனி அந்த சிரமம் இருக்காது. இனி உறுப்பினர் பக்கத்துக்கு லாக்-இன் செய்வதிலேயே பாஸ்புக் விவரங்களையும் பார்க்க முடியும். தனியே லாக்-இன் செய்யும் தேவை இருக்காது. மேலும், PF டிரான்ஸ்பர் சான்றிதழையும் பிடிஎப் வடிவில் இந்த தளத்தில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.
News September 19, 2025
13 பந்துகளில் அரைசதம்.. அதிரடி காட்டிய வீரர்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக அரைசதம் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனையை நமீபியா வீரர் ஜேன் ஃபிரைலிங்க் படைத்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20-ல், வெறும் 13 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் விரட்டி 77 ரன்கள் எடுத்தார். நமீபியா 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்த நிலையில், சேஸ் செய்த ஜிம்பாப்வே 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.