News June 22, 2024

25 போலீசார் மாற்றம்-எஸ் பி யின் அதிரடி உத்தரவு

image

திருச்சி கொள்ளிடம் பகுதியில் இரவு நேரத்தில் மணல் கொள்ளையடிப்பதாக பொதுமக்கள் கொள்ளிடம் போலீசாருக்கு புகார் அளித்து வந்தனர். ஆனால்,மணல் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை தடுக்க தவறியும், மணல் கடத்தல் கும்பலுக்கு போலீஸார் ஆதரவாக இருப்பதாக, திருச்சி எஸ்பி-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ன்று கொள்ளிடம் காவல் நிலையத்தை சேர்ந்த 25 போலீசாரை திருச்சி ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார்.

Similar News

News August 18, 2025

திருச்சிக்கு பக்கத்துல நம்பமுடியாத இடங்கள்?

image

திருச்சியில் மலைக்கோட்டை, கல்லணை ,ஸ்ரீ ரங்கம் கோயில் போன்ற இடங்களை தவிர நமக்கு தெரியாத பல இடங்கள் திருச்சியை சுற்றி இருக்குனு தெரியுமா?
✅முக்கொம்பு அணை,
✅பட்டாம்பூச்சி பூங்கா,
✅திருச்சி ரயில்வே அருங்காட்சியகம்,
✅அண்ணா அறிவியல் மைய கோளரங்கம்,
✅பச்சமலை மலைகள்,
✅புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி,
நம்ம திருச்சிக்கு பக்கத்துல இப்படி பல இடங்கள் இருக்குனு தெரியாத நபர்களுக்கும் SHARE செய்து ஒரு Visit பண்ணுங்க!

News August 18, 2025

திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முகேஷ் என்பவரையும், புங்கனூர் அருகே கஞ்சா வைத்திருந்த குணப்பிரகாசம், ராம்ஜி நகரில் கஞ்சா வைத்திருந்த ரமணி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இம்மூவரின் தொடர்பு குற்ற நடவடிக்கைகளை தடுக்க. இவர்களை குண்டாஸ் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க திருச்சி எஸ்பி உத்தரவிட்டார்.

News August 17, 2025

மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பெற்றோரிடம் ஒப்படைப்பு

image

திருச்சி ரயில் நிலையத்தில் கடந்த ஆக.15ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சேலத்தை சேர்ந்த லட்சுமணன்(20) என்பவர் சுற்றித்திரிந்தார், அப்போது அரை மீட்டு செந்தண்ணீர்புரத்தில் உள்ள காப்பகத்தில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.17) லட்சுமணனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களை நேரில் வரவழைத்த ரயில்வே போலீசார், லட்சுமணனை ஒப்படைத்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!