News August 17, 2024

25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

image

திண்டிவனம் அருகே உள்ள கட்டளை கிராமத்தில் யுவராஜ் என்பவரின் 2 ஏக்கர் நிலத்தின் பட்டா அவரது தந்தை கதிர்வேல் பெயரில் இருந்துள்ளது. இந்த 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்ய விவசாயியிடம் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ லட்சுமணன் அவர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

Similar News

News August 28, 2025

விழுப்புரத்தில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கற்சிற்பம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியை அடுத்த தாமரைக்குளம் பகுதியில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிற்பத்தில் யானை மீது அமர்ந்து பவனி வருவது போன்ற முருகனின் அழகிய கற்சிற்பம் ஒன்று விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிய சிற்பம் விழுப்புரம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்

News August 27, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று(ஆக.27) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

விழுப்புரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

image

நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி திருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும். இது ஒரு பத்துநாள் திருவிழாவாகும், அதனை முன்னிட்டு விழுப்புரம் – வேளாங்கண்ணி இடையே ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 8  ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!