News April 24, 2024
தைவானில் 24 மணி நேரத்தில் 247 முறை நிலநடுக்கம்

தைவான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 247 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதில் 6.3 ரிக்டர் அளவிலும் ஒருமுறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 20 நாள்களில் 1,095 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 3இல் ஏற்பட்ட நிலநடுக்கமே, கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News January 1, 2026
கற்பனை ஓவியமே மாளவிகா மோகனன்

மயிலின பெண்ணாக வலம் வரும் மாளவிகா மோகனன், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவர் வீசும் பார்வை, ஆடல் பாடல் மறந்து நெஞ்சை உறைய செய்கிறது. பூங்குளிராக, தூவும் மழையாக, காணும் கண்களுக்கு ஒளியாக, கற்பனை ஓவியமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த போட்டோஸ், உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News January 1, 2026
14 வழக்குகளில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் என்கவுன்டர்

பிஹார், பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், முக்கிய நக்சலைட் தலைவர் தயானந்த் மலாக்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். 14-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவரின் தலைக்கு ₹50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. மலாக்கரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், INSAS ரகத் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 1, 2026
ஷாருக் கான் ஒரு துரோகி: பாஜக MLA

அண்மையில் நடந்த IPL மினி ஏலத்தில் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மானை KKR அணி எடுத்திருந்தது. இந்நிலையில் வங்கதேச வீரரை அணியில் சேர்த்ததற்கு உ.பி.,யை சேர்ந்த பாஜக MLA சங்கீத் சோம், KKR அணியின் உரிமையாளர் ஷாருக்கானை கடுமையாக சாடியுள்ளார். வங்கதேசத்தினர் இங்கு விளையாடக்கூடாது என கூறிய அவர், ஷாருக் போன்ற துரோகிகளுக்கு இது தெரிய வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார்.


