News April 24, 2024
தைவானில் 24 மணி நேரத்தில் 247 முறை நிலநடுக்கம்

தைவான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து 247 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதில் 6.3 ரிக்டர் அளவிலும் ஒருமுறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் கடந்த 20 நாள்களில் 1,095 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதில் 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப். 3இல் ஏற்பட்ட நிலநடுக்கமே, கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News April 4, 2026
தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி.. அதிர்ச்சி அளிக்கும் கணிப்பு

ஏப்.23-ஐ நோக்கி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், SM-ல் ஆற்காடு பஞ்சாங்கம் வைரலாகிறது. அதில், ‘2026 தேர்தலில் உலகளாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி அமையும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள கணிப்பு ஜெயிக்குமா? விடைக்காக அடுத்த மாதம் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.
News April 4, 2026
கிட்னி திருட்டில் நடிகை ஜூலிக்கு தொடர்பா?

தமிழகத்தை உலுக்கிய கிட்னி மோசடியில் நடிகை ஜூலிக்கும் தொடர்புள்ளதாக திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஜூலி, அவரது கணவர் முகமது இக்ரீம், தோழி சர்மிளா ஆகியோர் இந்த திருட்டு நெட்வொர்க்கில் உள்ளவர்கள் தான் என்றும் அவர் ஊடக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட இருவர் அளித்த ஆதாரங்களையும் கோர்ட் நியமித்த குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News April 4, 2026
தமிழக அரசியலில் மீண்டும் தடம் பதிக்கும் ‘வேல்’

திருச்செந்தூரில் உள்ள முருகனின் வேல் திருடு போய்விட்டது என்ற புகாருக்கு, அப்போதைய CM எம்ஜிஆருக்கு எதிராக கருணாநிதி மேற்கொண்ட நடைபயணத்திலேயே தமிழக அரசியலில் வேலின் பயணம் தொடங்கிவிட்டது எனலாம். 2010 காலகட்டத்தில் முப்பாட்டன் முருகன் என மீண்டும் அரசியல் களத்தில் வேலை நாட்டினார் சீமான். இந்நிலையில், 2026 பிரசாரத்தில் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் வேல் கொடுக்கப்படுவது கவனிக்கத்தக்கது.


