News January 10, 2025

247வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த ‘தேர்தல் மன்னன்’

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று அழைக்கப்படும் பத்மராஜன் (64) என்பவர் இன்று முதல் வேட்பாளராக, தேர்தல் அலுவலர் மணீஷிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்துள்ள 247வது வேட்பு மனு ஆகும். இவர் கடைசியாக வயநாடு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 17, 2026

தமிழக பட்ஜெட்: ஈரோட்டிற்கு அறிவிப்பு

image

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் முக்கிய அறிவிப்பாக நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றார்.

News February 17, 2026

ஈரோடு மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

ஈரோடு மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

News February 17, 2026

BREAKING ஈரோட்டிற்கு பட்ஜெட்டில் அறிவித்தார் அமைச்சர்!

image

தமிழக பட்ஜெட் 2026-2027-ஐ தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் மொழி மற்றும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் ‘நொய்யல் அருங்காட்சியகம்’ உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்; இதற்காக ₹285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!