News September 14, 2024

கடலூர் மாவட்டம் முழுவதும் 24000 பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்

image

கடலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று காலை நடைபெற்றது. இதில் கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 113 மையங்களில் 32,983 பேர் தேர்வெழுத விண்ணப்பித்தனர் இதில் 24,272 பேர் தேர்வு எழுதினர் 8711 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Similar News

News September 13, 2025

கடலூர் அருகே இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இன்று (13.9.2025) பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142-290039, 9499055907 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News September 13, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (செப்.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2025

தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு- அமைச்சர் தகவல்

image

தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்னும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!