News March 17, 2024

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித் துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனி நபரோ, கட்சியினரோ வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், tn.electioncomplaints2024.income.gov.in என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும்.

Similar News

News October 20, 2025

தங்கம் போல் ஜொலிக்கும் கீர்த்தி ஷெட்டி

image

தனது வெட்க புன்னகையால் இளசுகளின் இதயங்களை வென்றவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள கீர்த்தி, தமிழிலும் LIK, வா வாத்தியார், ஜீனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தங்க நிறத்தில் சேலை அணிந்து பூவுலகின் தேவதை போல் ஜொலிக்கும் போட்டோஸை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பார்த்தவுடன் ஆளை மயக்கும் கீர்த்தியின் போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.

News October 20, 2025

சிறப்பான சேவையில் சென்னை மெட்ரோ முதலிடம்

image

பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் இடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘கம்யூனிட்டி ஆப் மெட்ரோஸ்’ என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ள 32 நகர்ப்புற மெட்ரோ ரெயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு இதை அறிவித்துள்ளது. இந்த ஆய்வில் மெட்ரோ ரெயில் சேவையின் தரம், நம்பகத்தன்மை, பாதுகாப்பு, பயன்படுத்துவதற்கு எளிமை, சவுகரியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

News October 20, 2025

₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ இவரா?

image

இந்திய சினிமா இன்று பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடிகர்கள் கோடிகளில் சம்பளத்தை அள்ளுகின்றன. ஆனால் இந்தியாவில் முதன்முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த சிரஞ்சிவிதான், முதலில் ₹1கோடி வாங்கி அமிதாப், ரஜினி உள்ளிட்ட நடிகர்களை பின்னுக்கு தள்ளினார். ஆபத்பந்தவுடு(1992) என்ற படத்திற்காக, சிரஞ்சீவி ₹1.25 கோடி சம்பளம் வாங்கினார்.

error: Content is protected !!