News March 18, 2024

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 17) காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் ரெய்டு நடத்தினர். அதில் 94 லிட்டர் கள்ளச்சாராயம், 262 மது பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 20, 2026

வேலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

News January 20, 2026

வேலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

வேலூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

வேலூர்: முருங்கைக்காய் விலை உயர்வு!

image

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு காரணமாக முருங்கைகாய் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு குறைந்தளவே முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது. எனவே அவற்றின் விலை கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதைத்தவிர மாங்காய், பூண்டு விலை சற்று அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!