News September 6, 2024

24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் – விருதுநகர் எஸ்பி

image

விருதுநகர் மாவட்டத்தில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் 24 மணி நேரமும் தனக்கு வாட்ஸ் அப்பில் நேரிடையாக தகவல் அளிக்கலாம் என மாவட்ட எஸ்பி கண்ணன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். போதை பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்கள் குறித்து 24 மணி நேரமும் பொதுமக்கள் (99402 77199) இந்த வாட்சப் எண்ணில் தகவல் அளிக்கலாம். தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News

News October 19, 2025

விருதுநகருக்கு தீபாவளியன்று கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அரபிக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென், மேற்கு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் இன்றும், நாளையும்(அக்.19, 20) விருதுநகர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட முடியுமா என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது.

News October 19, 2025

விருதுநகர்: ஊராட்சி செயலர் பணி., தேர்வு இல்லை

image

விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK<<>> செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

விருதுநகர்: கனமழை – PETROL BUNK-ல் நிகழ்ந்த சம்பவம்

image

அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று அக்.19 அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக அந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்து கார் முற்றிலும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!