News October 29, 2024
24 மணி நேரமும் இயங்கும் தீயணைப்பு நிலையங்கள்

புதுவையில் 9 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அதன்படி, புதுவை -2336238, கோரிமேடு -2272913, வில்லியனூா்- 2668101, திருக்கனூா்- 2688101, மடுகரை- 2699101, பாகூா்- 2633101, காலாப்பட்டு- 2655873, திருபுவனை- 2641101 சேதராப்பட்டு- 2678101 ஆகிய தீயணைப்பு நிலையங்கள் தீபாவளி நாளில் 24 மணி நேரமும் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என தீயணைப்பு கோட்ட அதிகாரி இளங்கோவன் தெரிவித்தார்.
Similar News
News September 13, 2025
காரைக்காலில் ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை, கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை இணைப்பு சாலைக்கான முதற்கட்ட கல ஆய்வு பணிகளை ஆட்சியர் மேற்கொண்டார். இணைப்பு சாலைகளுக்கு தேவையான முன் கள ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை அறிவுறுத்தினார்.
News September 13, 2025
புதுவை: 500 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்!

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தேசிய ஊட்டச்சத்து மாதம் தொடக்க விழா கம்பன் கலை அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு தேவையான முட்டை, கொண்டைக்கடலை, சத்துமாவு வழங்கப்படுகிறது. புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
ஏழை மாணவனுக்கு உதவி கரம் நீட்டிய ஆட்சியர்

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவன் ராஜகுரு இவருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும், தனது வறுமையால் படிக்க முடியாமல் தவித்து வந்தார். இவருடைய நிலைமையை அறிந்த மாவட்ட ஆட்சியர் குலோதுங்கன் இன்று மாணவனின் வீட்டுக்கு சென்று மாணவனுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி உதவி கரம் நீட்டி நெகழ்ச்சியை ஏற்படுத்தினார்.