News March 25, 2025

230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம்!

image

தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News July 10, 2025

உங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க அரிய வாய்ப்பு

image

சேலம் மாவட்டம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில், நிலுவையில் உள்ள வழக்குகளை, ஜூலை முதல் செப்டம்பர் வரை அனைத்து நாட்களிலும், மாவட்ட சமசர மையம் மற்றும் தாலுகா சமரச மையங்களில் நேரடியாகவோ, வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ சமரசமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை, வழக்காடிகள் அனைவரும் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 10, 2025

ரூ.320க்கு ₹15 லட்சம் விபத்து காப்பீடு; இன்றே பதிவு செய்யுங்கள்

image

“இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு வெறும் ரூ.320, 550, 799 பிரீமியத்தில் 15 லட்சம், 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு அறிமுகம். இன்று முதல் (ஜூலை 10) சிறப்பு விபத்துக் காப்பீடு பதிவு கடைப்பிடிக்கப்படவுள்ளதால் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் பதிவுச் செய்து கொள்ளலாம்” என சேலம் அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.ஷேர் பண்ணுங்க

News July 10, 2025

சேலம் ஜூலை 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

சேலம் ஜூலை 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி தமிழ்நாடு அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️காலை 10:15 மணி சோனா கல்லூரியில் முதலாம்ஆண்டு வகுப்புகள் துவக்க விழா▶️ 12 மணி இந்திய புரட்சிகர சோசலிஸ்ட் இயக்கம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்▶️ மாலை 6 மணி குரு பூர்ணிமா பூஜைகள்

error: Content is protected !!