News March 25, 2025
230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம்!

தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 7, 2025
சேலம்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) சேலம் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 7, 2025
BREAKING: சேலத்தில் சுட்டுப் பிடித்த போலீஸ்!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே ஒரு கல்குவாரியில், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 2 மூதாட்டிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில், இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கூலித் தொழிலாளிகளான பாவாயி மற்றும் பெரியம்மாள் ஆகியோரை கொலை செய்து, அவர்களது நகைகளை திருடிய அய்யனார் என்பவரை, காவல்துறையினர் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
News November 7, 2025
சேலம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

சேலம் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க


