News March 25, 2025
230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம்!

தமிழகத்தில் வரும் மார்ச் 28- ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் 41,398 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வைக் கண்காணிக்க 230 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News December 19, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் இணையத்தில் https://salem.nic.in வெளியிடப்பட்டது. 42 வயதுக்குட்பட்ட பிளஸ்-டூ படித்தவர்கள் வருகின்ற டிச.31ம் தேதிக்குள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
சேலத்தில் கடும் கட்டுப்பாடு!

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி கட்டாயம். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம், மத நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது என போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.


