News June 27, 2024
அதிமுக போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக் கோரி அதிமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு 23 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. அதில், போராட்டம் அமைதியான முறையில் நடக்க வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு வாகனங்களை கொண்டு வரக்கூடாது, அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்களை தாக்கி பேசக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
Similar News
News January 4, 2026
உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள்

வெனிசுலா மீது டிரம்ப் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதால், உலகின் எண்ணெய் வளம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. உலக ஆற்றல் தேவையில் 70% கச்சா எண்ணெய் மூலமே பெறப்படுகிறது. எனவே, அதிகம் இறக்குமதி செய்யப்படும் வளமாகவும், வளமான பொருளாதாரத்தின் குறியீடாகவும் இது உள்ளது. அந்த வகையில், அதிக எண்ணெய் வளங்களை கொண்ட நாடுகளை மேலே தொகுத்துள்ளோம். அதை Swipe செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
News January 4, 2026
திமுக ஆட்சியை அகற்ற விரதம் இருங்கள்: நயினார்

திமுக ஆட்சியை அகற்ற அடுத்த 3 மாதத்திற்கு பாஜகவினர் விரதம் இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், TN-ல் எங்கும் போதை மயம். எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்தார். அதோடு கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு செந்தில் பாலாஜியே காரணம் என்றும், திருப்பரங்குன்றத்தில் பூரண சந்திரன் தீக்குளித்ததற்கு காரணம் CM ஸ்டாலின் என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
News January 4, 2026
சத்தீஸ்கரின் முதல் ‘நக்சல் இல்லாத’ கிராமம்!

ஒரு காலத்தில் நக்சலைட்களின் கோட்டையாக இருந்த படேசெட்டி கிராமம், இன்று சத்தீஸ்கர் அரசின் ‘இல்வாட் பஞ்சாயத்து’ திட்டத்தின் கீழ் மாநிலத்தின் முதல் நக்சல் இல்லாத கிராமமாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம் இக்கிராமம், அம்மாநில CM விஷ்ணு தியோ சாய் அறிவித்த ₹1 கோடி சிறப்பு நிதியை பெற உள்ளது. இந்த உதவியுடன் சாலைகள், குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


