News June 27, 2024
அதிமுக போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக் கோரி அதிமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு 23 நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது. அதில், போராட்டம் அமைதியான முறையில் நடக்க வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு வாகனங்களை கொண்டு வரக்கூடாது, அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்களை தாக்கி பேசக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
Similar News
News January 22, 2026
சென்னையில் துடிதுடித்து பலி

சென்னை கோயம்பேட்டில் இன்று (ஜன-22) காலை காய்கறி வாங்க அரும்பாக்கத்தில் இருந்து ராசு (58) என்பவர் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, கோயம்பேடு அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து கோயம்பேடு போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விபத்து குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News January 22, 2026
இந்த நம்பரை அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்!

MyGov உதவி மையத்தின் ‘+91-9013151515’ என்ற எண்ணை போனில் Save செய்யுங்கள் *இந்த எண்ணுக்கு WhatsApp-ல் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள் *அதில் வரும் கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இது எளிய வழி என்றாலும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற, முன்னதாக நீங்கள், DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்து வைக்க வேண்டியது அவசியம். இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 22, 2026
கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,250 ஆக உயர்வு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கருணை குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கருணை ஓய்வூதியம் ₹4,500-லிருந்து ₹5,000 ஆகவும், கருணை குடும்ப ஓய்வூதியம் ₹2,000-லிருந்து ₹2,250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


