News August 28, 2025

கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்

image

கடந்த 2015-ல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹமது உயிரிழந்த விவகாரத்தில், 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது. இந்நிலையில், இதுதொடர்பாக 6 கட்டங்களாக பதியப்பட்ட வழக்கில் 22 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ள திருப்பத்தூர் கோர்ட், 161 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இஸ்லாம் பாஷாவின் சொத்துகளை முடக்குமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

மகளிர் தினத்தில் வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை?

image

தமிழக தேர்தல் களத்தில் திமுக, அதிமுக உள்ளிட்டவை தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தனித்து களம் காணும் விஜய்யின் தவெக, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. அதன்படி சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8-ம் தேதி தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட உள்ளாராம். அதில் மகளிரை குறிவைத்து பல திட்டங்கள் இருக்கும் என சொல்லப்படும் நிலையில், நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?

News March 4, 2026

தேர்தல் வாக்குறுதிகள்.. EPS முக்கிய அறிவிப்பு

image

அனைத்து குடும்பத்தினருக்கும் கருணைத் தொகை ₹10,000, மகளிருக்கு மாதந்தோறும் ₹2,000 உள்பட 3 கட்ட வாக்குறுதிகளை அதிமுக அளித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை வார்டு வரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தொண்டர்களுக்கு EPS உத்தரவிட்டுள்ளார். இன்று நடைபெற்ற அதிமுக மா.செ., ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

News March 4, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான செய்தி

image

2021 தேர்தலின்போது 5 சவரன் தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது, சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு, நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதி வெளியாகலாம் என மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதேநேரம், இதை எதிர்பார்த்து கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

error: Content is protected !!