News October 15, 2024
21,000 மாநகராட்சி ஊழியர்கள் தயார்

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது நேற்று நள்ளிரவு முதல் சென்னை முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில், 21,000 மாநகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்கள் முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
Similar News
News September 13, 2025
திரு.வி.க.நகரில் கஞ்சா பறிமுதல்: பெண் கைது

திரு.வி.க.நகர் காவல் குழு ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை பேருந்து நிலையம் அருகே சந்தேகமாக பையுடன் நின்ற 2 நபர்களை விசாரித்தபோது, 30 கிராம் OG கஞ்சா, 1.100 கிலோ கஞ்சா மற்றும் ₹90,000 பணம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பின் நஸ்ரின் என்ற பெண் கைது செய்யப்பட்டு, 17 வயது இளஞ்சிறார் மீது விசாரணை நடைபெறுகிறது. நஸ்ரின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
News September 13, 2025
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்துள்ளார். அவரை சந்தித்து உரையாற்றினார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்ரமராஜாவும் உடன் இருந்தார். விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
News September 13, 2025
சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி சேர்க்கை

சென்னை, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளுக்கு மொத்தமாக இணையதளத்தில் 370 காலியிடங்கள் உள்ளன. விவரங்களை https://kilpaukmedicalcollege.in/ என்ற பலகையில் காணலாம்.