News May 20, 2024
21 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்

ஆரியபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2002ல் பத்தாம் வகுப்பு படித்த மாணவ- மாணவிகள், 21 ஆண்டுக்குப் பின் நேற்று அதே பள்ளியில் ஒன்றுகூடி சந்தித்து கொண்டனர். அப்போது, பள்ளி பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். 2002ல் பாடம் நடத்திய ஆசிரியர்கள் சற்குணம், முத்துராமராஜா , வரதராஜ் ஆகியோரையும் வரவழைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டி நெகிழ வைத்தனர். தொடர்ந்து பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கினர்.
Similar News
News August 22, 2025
சேலம் மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை!

சேலம் மாநகர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதாவது, ” தற்போது WhatsApp மூலம் RTO Challan எனப்படும் போலி செயலிகள் பரவி வருகின்றன. இதனை டவுன்லோட் செய்து install செய்தால், உங்கள் மொபைல் தகவல்கள் திருடப்படுவதோடு, மோசடிக்காரர்கள் தவறான முறையில் பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற போலி செயலிகளை நம்பாமல் இருக்குமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT
News August 21, 2025
யூரியாவைப் பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் யூரியாவைக் கடத்துதல், பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் தனியார் உர விற்பனை நிலையத்தார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நிலையத்தின் உரிமம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படும். கடத்தல், பதுக்கல் கண்டறியப்படும் உர விற்பனை நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News August 21, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.