News December 26, 2025
21 ஆண்டுகளை கடந்தும் ஓயாத சுனாமியின் துயரம் (PHOTOS)

ஆழிப்பேரலையின் தாண்டவத்தால் TN-ல் சுமார் 8,000 பேர் உயிரிழந்த துயரம் நிகழ்ந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தாய், தந்தை, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் ஆறாத வடுவுடன் கண்ணீர் மல்க கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். எனது உறவுகளை திருப்பிக்கொடு என கடல் அன்னையிடம் ஒரு சிலர் மன்றாடியது காண்போரின் நெஞ்சங்களை உலுக்கியது. கடல் அலைகள் எழுப்பும் ஒலி அவர்களின் காதில் சோக கீதமாகவே ஒலிக்கிறது.
Similar News
News December 27, 2025
விஜய் உண்மையான தளபதி, மற்றவர்கள் வெட்டி தளபதி: KAS

2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெல்லும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் பேசிய அவர், பல விவகாரங்களுக்கு விஜய் வாய் திறப்பதில்லை என சிலர் விமர்சிக்கின்றனர்; ஆனால், நேரம் வரும்போது அவர் பேசுவார் என்று குறிப்பிட்டார். படைக்குத் தலைமை வகிப்பவர், வென்று நாட்டை ஆள்பவரே தளபதி என்று கூறிய அவர், விஜய் தான் உண்மையான தளபதி எனவும், மற்றவர்களெல்லாம் வெட்டி தளபதி என்றும் விமர்சித்தார்.
News December 27, 2025
வாக்காளர்களை சேர்க்க 2 நாள்கள் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அதன்படி, 75,000 பூத்துகளிலும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவோ (அ) பெயரை நீக்கவோ படிவம் 7-ஐ பூர்த்திசெய்ய ECI அறிவுறுத்தியுள்ளது. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 27, 2025
தனியார் பஸ்களை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து TNSTC சார்பில் இயக்குவது தொடர்பான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, தேசியமயமாக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் மட்டுமே இந்த பஸ்கள், தொலைதூர பயணங்களுக்காக இயக்கப்படும். இதன் மூலம் பண்டிகை காலங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்கலாம் என அரசு கூறுகிறது. இதுபற்றி பொதுமக்கள் 30 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அரசு கூறியுள்ளது. உங்கள் கருத்து என்ன?


