News August 3, 2024

206 பேரை காணவில்லை: பினராயி விஜயன்

image

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 206 பேரை காணவில்லை என, கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பலரது நிலைமை என்னவென்றே தெரியவில்லை. இதையடுத்து ராணுவம், இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 1, 2025

நீலகிரி: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

image

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 1, 2025

BREAKING: அமளியால் முடங்கிய லோக்சபா

image

எதிர்க்கட்சி MP-க்களின் அமளியால் லோக்சபா பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. SIR நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, TMC, SP உள்ளிட்ட கட்சிகளின் MP-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக, குளிர்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என <<18436891>>PM மோடி<<>> வலியுறுத்தியிருந்தார்.

News December 1, 2025

துரோகத்தின் சம்பளம் மரணம்.. மனைவி சடலத்துடன் Selfie!

image

இறந்த மனைவியின் உடலுடன் Selfie எடுத்து, ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என கணவர் ஸ்டேட்ஸ் வைத்த சம்பவம் அதிரவைத்துள்ளது. நெல்லையை சேர்ந்த பாலமுருகன், ஸ்ரீபிரியாவிற்கு திருமணமான நிலையில், ஸ்ரீபிரியா வேறொருவருடன் பழகுவதாக பாலமுருகன் குற்றம்சாட்டினார். இதனால், ஸ்ரீபிரியா கோவையிலுள்ள ஹாஸ்டலில் தனியாக வசித்து வந்துள்ளார். அவரை அழைக்க சென்ற போது நடந்த தகராறில், பாலமுருகன் ஸ்ரீபிரியாவை கொலை செய்துள்ளார்.

error: Content is protected !!