News August 3, 2024
206 பேரை காணவில்லை: பினராயி விஜயன்

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 206 பேரை காணவில்லை என, கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பலரது நிலைமை என்னவென்றே தெரியவில்லை. இதையடுத்து ராணுவம், இஸ்ரோ விஞ்ஞானிகள் உதவியுடன் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
காக்கைகள் சொல்லும் சகுனம்; கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

பறவைகளிலேயே அதிக புத்திசாலித்தனம் மற்றும் நினைவுத்திறன் கொண்டது காகம். பெரும்பாலான இந்துக்கள் இவற்றை முன்னோர்களாக வழிபடுகின்றனர். அதோடு, காகங்கள் நமக்கு நடக்கப்போகும் நல்லது கெட்டது பற்றி சொல்வதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அது என்ன என்பதை தெரிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. இதில் எதை நீங்கள் பார்த்திருக்கீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
News October 21, 2025
நடிகர் அஸ்ரானி காலமானார்.. குவியும் இரங்கல்

பாலிவுட் <<18059439>>நடிகர் அஸ்ரானி<<>> மரணமடைந்த செய்தி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது. அவரின் மரணத்தை மேனேஜர் பாபு பாய் 3 மணியளவில் அறிவித்தார். அதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான், அஸ்ரானி இன்ஸ்டாவில், ‘Happy Diwali’ என வாழ்த்தி இருந்தார். இவரின் மறைவுக்கு நடிகர் அக்சய் குமார், கிரிக்கெட்டர் ஷிகர் தவான், MH மாநில CM பட்னாவிஸ் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 21, 2025
முதல்முறை முதலீட்டாளர்களே.. நல்ல நேரம் இதுதான்

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு வேகமாக வளரும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். விடுமுறை தினமான இன்று மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில் மட்டும் இயங்கும் பங்குச்சந்தையில், உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். நாளையும் (அக்.22) பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை இயங்கும்.