News January 14, 2026
2040 வரை வராது.. இன்றைய போகியின் ஸ்பெஷல்

இன்று நாம் கொண்டாடி வரும் போகி பண்டிகையுடன் ஷட்திலா ஏகாதசியும் சேர்ந்து வந்துள்ளது. போகி அன்று, ஏகாதசி திதி வருவது கூடுதல் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நிகழ்வு அடுத்ததாக 2040-ல் தான் நிகழ்கிறதாம். இன்றைய தினம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், எள், வெல்லம், துணிகள், நெய், உப்பு, செருப்புகளை தானமாக கொடுப்பதும் நன்மைகள் தருமாம். SHARE IT.
Similar News
News February 17, 2026
தமிழகத்தில் ஒவ்வொருவர் பெயரிலும் ₹1.37 லட்சம் கடன்

2026-27 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ₹10.62 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டு தரவுகளின்படி, தமிழக மக்கள்தொகை 7 கோடியே 72 லட்சமாக இருக்குமென கருதப்படுகிறது. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் சராசரியாக ₹1.37 லட்சம் மறைமுக கடன் சுமை உள்ளது. உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News February 17, 2026
நடிகை லீலா காலமானார்.. கடைசி PHOTO

பிரபல சின்னத்திரை <<19163656>>நடிகை ராஷ்மி லீலா<<>>, பெங்களூருவில் உள்ள ஹாஸ்பிடலில் காலமானார். Pulmonary Fibrosis என்ற நுரையீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தான் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்யும்படி கடந்த சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அவரது உடலுக்கு கன்னட திரைத்துறையினர், நண்பர்கள், ரசிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #RIP
News February 17, 2026
உலகின் பணக்கார கிராமம் இந்தியாவில் உள்ளது தெரியுமா?

குஜராத்தில் உள்ள மதாபார் என்ற கிராமம் உலகின் பணக்கார கிராமங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் 17-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளும், சுமார் ₹7,000 கோடி வங்கி வைப்புத்தொகையும் உள்ளன. இங்குள்ள குடும்பங்களில் 65% பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதால், அவர்கள் தங்கள் வருமானத்தை சொந்த ஊரான மதாபார் வங்கிகளில் சேமிக்கின்றனர். இதனால் இந்த ஊரில் பணம் குவிந்துள்ளது.


