News August 2, 2024
2040ல் கடலில் மூழ்கப் போகும் சென்னை

2040ஆம் ஆண்டில் கடல் மட்ட உயர்வு காரணமாக, சென்னையின் 7 % நிலப்பரப்பு கடல் நீரில் மூழ்கும் என சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் கடல் மட்டம் உயரக்கூடும். அடையாறு சுற்றுச்சுழல் பூங்கா, தீவுத் திடல், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (15.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 15, 2025
‘தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவையும் அழைத்திடுக’

சென்னையில் தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு, தவெகவுக்கு அழைப்பு விடுக்கக் கோரி இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். தேர்தல் செயல்முறைகள் முழுமையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றால், தவெக-வையும் அடுத்தடுத்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும்’ என்றார்.
News November 15, 2025
சென்னை: ரயில்வேயில் சூப்பர் வேலை.. APPLY NOW

சென்னை மக்களே, இந்திய ரயில்வேயில் டிக்கெட் கிளர்க், ஜூனியர் கிளர்க் போன்ற 3058 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு 12th முடித்து, 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.27ம் தேதிக்குள் இங்கே <


