News August 2, 2024
2040ல் கடலில் மூழ்கப் போகும் சென்னை

2040ஆம் ஆண்டில் கடல் மட்ட உயர்வு காரணமாக, சென்னையின் 7 % நிலப்பரப்பு கடல் நீரில் மூழ்கும் என சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் கடல் மட்டம் உயரக்கூடும். அடையாறு சுற்றுச்சுழல் பூங்கா, தீவுத் திடல், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
கிறிஸ்துமஸ்க்குள் மல்டி ஆக்சில் பேருந்துகளை இயக்க திட்டம்

அரசு பேருந்துகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் ஒன்றாக 20 மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை கருத்தில் கொண்டு மல்டி ஆக்சில் பேருந்துகளை விரைந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 20ம் தேதிக்குள் முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
News November 21, 2025
சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் பரபரப்பு புகார்!

சென்னையில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் 2 மாதங்களாக ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஓய்வுபெற்ற நீதிபதி மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது
News November 21, 2025
சென்னையில் முன்னாள் நீதிபதி மீது பெண் புகார்.

சென்னையில் 65 வயதுடைய ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி மீது பெண் ஒருவர் அத்துமீறியதாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் குறித்து டி.பி.சத்திரம் போலீசார் 2 மாதங்களாக ரகசிய விசாரணை நடத்தினர். விசாரணையில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, ஓய்வுபெற்ற நீதிபதி மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும், தீவிர விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது


