News August 2, 2024
2040ல் கடலில் மூழ்கப் போகும் சென்னை

2040ஆம் ஆண்டில் கடல் மட்ட உயர்வு காரணமாக, சென்னையின் 7 % நிலப்பரப்பு கடல் நீரில் மூழ்கும் என சி.எஸ்.டி.இ.பி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் கடல் மட்டம் உயரக்கூடும். அடையாறு சுற்றுச்சுழல் பூங்கா, தீவுத் திடல், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் கடல் மட்ட உயர்வால் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம்!

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, இத்திட்டத்திற்கான இறுதிக்கள அறிக்கையில் (DPR) சேர்க்கப்படவுள்ள வழித்தட வரைபடத்தை தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தப்படும். அடுத்த மாதத்தில் முடிவு தெரியவரும். மேலும், ஆய்வுப் பணிகளைத் தொடர தேவையான ஒப்புதல்களையும் கோரியுள்ளது.
News November 23, 2025
சென்னை: வாடகை கேட்ட HOUSE OWNERக்கு நேர்ந்த துயரம்

47 வயது பெண்ணின் கொருக்குப்பேட்டை வீட்டில் ராபர்ட் என்பவர் கடந்த பிப்ரவரி முதல் வாடகைக்கு குடியிருந்தார். ஆக மாதம் முதல் வாடகை பணம் சரியாக வழங்காமல் இருந்ததால், உரிமையாளர் கேட்டபோது, அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, செல்போன் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதனால் பெண்ணை தொடர்பு கொண்டு சிலர் அநாகரிகமாக பேசியுள்ளனர். புகாரின் பேரில் V-4 இராஜமங்கலம் போலீசார் ராபர்ட்டை நேற்று கைது செய்தனர்.
News November 23, 2025
மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


