News September 2, 2025

தமிழகத்தில் தொடங்கியது தேர்தல் ஃபீவர்

image

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. இதற்காக முதற்கட்டமாக, பெரம்பலூருக்கு 180 மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரங்களை பெரம்பலூர் ஆட்சியர் மிருணாளினி ஆய்வுசெய்தார். இதன்பிறகு வாக்கு இயந்திரங்கள், கிடங்கில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

Similar News

News September 2, 2025

TMC என்றால் எத்தனை லிட்டர் தண்ணீர் தெரியுமா?

image

காவிரி, மேட்டூர் அணை நீர்மட்டம் குறித்து பேசும்போது, அடிக்கடி TMC என்ற சொல்லை கேட்டிருப்போம். TMC என்பதன் விரிவாக்கம் ‘Thousand Million Cubic feet’. இது நீரின் அளவை அளக்கும் அலகு ஆகும். ஒரு TMC என்பது 28 பில்லியன் லிட்டர், அதாவது 2,830 கோடி லிட்டர்கள். நதிகள், அணைகள், நீர்த்தேக்கங்கள் எவ்வளவு தண்ணீர் சேமிக்கின்றன, எவ்வளவு தண்ணீரை வெளியேற்றுகின்றன என்பதை அளக்க TMC பயன்படுத்தப்படுகிறது. SHARE IT.

News September 2, 2025

இந்திய மக்களை ஆத்திரமூட்டிய இலங்கை அதிபர்: CPI சாடல்

image

கச்சத்தீவை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என <<17588606>>இலங்கை அதிபர்<<>> தெரிவித்திருந்தார். அவரின் இந்த பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலுச்சேர்க்காது என CPI மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை இது ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளதாகவும் சாடியுள்ளார். தமிழக மீனவர்கள் குறித்த அவரது அணுகுமுறை தவறாக உள்ளதாகவும் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

News September 2, 2025

₹1,000 மகளிர் உரிமை தொகை.. முடிவுக்கு வந்த காத்திருப்பு

image

வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், தமிழகம் திரும்பியதும் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி புதிய அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியான மகளிருக்கு எப்போது ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அரசு வெளியிட உள்ளதாம். தயாராக இருங்க தாய்மார்களே..!

error: Content is protected !!