News December 31, 2025
2025-ல் மாவட்டம் வாரியாக நாய்க்கடி பாதிப்பு!

2025-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 6.23 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ல் இருந்ததை விட 2025-ல் 1.5 லட்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிகளவில் நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்ற டாப் மாவட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை இருக்கிறதா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News January 22, 2026
வைத்திலிங்கம் அதிர்ச்சி.. அதிமுகவில் மீண்டும் சேர்ந்தனர்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று திமுகவில் இணைந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவரின் தீவிர விசுவாசிகளாகவும், OPS ஆதரவாளர்களாகவும் இருந்த தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று EPS-ஐ நேரில் சந்தித்து மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். விரைவில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்த திட்டமிட்ட வைத்திலிங்கத்திற்கு, இது அதிர்ச்சி அளித்துள்ளது.
News January 22, 2026
உடனே செய்யுங்க: அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக <<18921270>>சுகாதாரத்துறை <<>>எச்சரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு பதிவான பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், எலிசா பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்களை கையிருப்பில் வைத்திருக்கவும், ஹாஸ்பிடல்களில் பிரத்யேக வார்டுகளை அமைக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
News January 22, 2026
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அறிவிப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதால், ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், ரேஷன் பொருள்களை வழங்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படும் என கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், எந்த ரேஷன் கடையிலும் பொதுமக்கள் தங்களுக்கான ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். SHARE IT.


