News March 18, 2025
2024.ல் 1330 விபத்துகளில் 408 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் 5 போலீஸ் சப் டிவிஷன்கள் உள்ளன. இந்த சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023-இல் 1174 விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் அதே சமயம் 2024.ம் ஆண்டு 56 விபத்துக்கள் அதிகரித்து மொத்தம் 1230 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 408 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் காலங்களில் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 19, 2025
அலைபேசியில் பேசியபடி 3 வது மாடியில் தவறி விழுந்தவர் பலி

தேனி, டி.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி 40.முன்னாள் ராணுவ வீரர். மனைவி அருள்மொழி 35. இரு மகள்கள் உள்ளனர். இவர் மாடியில் இரவு உணவு சாப்பிடுவது வழக்கம்.இந்நிலையில் மார்ச் 15ம் தேதி இரவு மனைவி அருள்மொழி மாடிக்கு உணவை எடுத்துச் சென்று பார்தத் போது அலைபேசியில் பேசியபடி 25 அடி உயரத்திலிருந்து வெற்றி தவறி கீழே விழுந்தது தெரிந்தது. தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்லா விசாரிக்கிறார்.
News March 18, 2025
தேனி : கிராமசபை கூட்டம் முக்கிய அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை (22.03.2025) முன்னிட்டு 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளார் .
News March 18, 2025
தேனி : நடப்பாண்டு வரியை செலுத்த கடைசி தேதி

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணம் தற்போது வசூல் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வரும் 31 ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக் கடமை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார